அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் நவம்பர் 10 ஆம் திகதி வரை உச்ச நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்மனுதாரர்களைச் சேர்த்து மனுக்களை திருத்த மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.