follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுமகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்க திட்டம்

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்க திட்டம்

Published on

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வர்த்தக அமைச்சு மற்றும் மகாபொல நிதியத்துடன் கலந்துரையாடப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்காக தற்போது மகாபொல விசேட புலமைப்பரிசில் திட்டத்தினூடாக தற்போது மாதாந்தம் 5,500 ரூபா வழங்கப்படுகின்றது.

மகாபொல சாதாரண திட்டத்தினூடாக மாணவரொருவருக்கு மாதாந்தம் 5,000 ரூபா வழங்கப்படுவதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

பணவீக்கம் அதிகரித்துள்ள காரணத்தினால் இந்த கொடுப்பனவுகளை 50 வீதத்தால் அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர், கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...