follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபசிலின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது – ஜே.சி.அலவத்துவல

பசிலின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டது – ஜே.சி.அலவத்துவல

Published on

பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் எதனையும் செய்ய முடியாது என்பது இறுதியாக இடம்பெற்ற வாக்கெடுப்பு எடுத்துக்காட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

பசில் ராஜபக்சவின் வார்த்தைகளுக்கு மாறாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் இதன் மூலம் அவருக்கு அதிகாரம் இல்லாதமை புலப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் இன்று மக்கள் வாழ முடியாத மிக மோசமான நிலைமை உருவாகி உள்ளதாகவும், பிள்ளைகளுக்கு உணவளிப்பதற்காக அடமானம் வைப்பதற்கு எதுவுமில்லாமல் மக்கள் தவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பாடசாலை மாணவர்களில் சுமார் முப்பது வீதமானவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...