follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுபாடசாலையில் அதிகரிக்கும் போதைப்பொருள் : கண்காணிக்க விசேட குழு!

பாடசாலையில் அதிகரிக்கும் போதைப்பொருள் : கண்காணிக்க விசேட குழு!

Published on

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை பரவுவதை தடுப்பதற்காக மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் விசேட கண்காணிப்புக் குழுக்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க கடந்த வாரம் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விசேட  கண்காணிப்புக் குழுக்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மேல்மாகாண பிரதம செயலாளருக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...