follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் விமானப்படையினரால் முன்னெடுப்பு!

இலங்கையில் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் விமானப்படையினரால் முன்னெடுப்பு!

Published on

ஆண்டில் பசுமைக் விரிவாக்கத்தை 27% முதல் 32% ஆக உயர்த்துவதன் மூலம் நாட்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக விசேட வேலைத்திடமொன்று விமானப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் வழிகாட்டல் மற்றும் தலைமையின்கீழ் இலங்கை விமானப்படையினரினால் கடந்த 2022 அக்டோபர் 29 ம் திகதி சியாம்பலா பிரதேச செயலகத்திற்குட்பட்ட வத்தேகம கபிலித்த வனப்பிரதேசத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

வீரவெல இலங்கை விமானப்படை தளத்தை மையமாக கொண்டு இல 04 ஹெலிகொப்டர் படைப்பிரிவிற்கு உரித்தான பெல் 212 ரக ஹெலிகாப்டர் மூலம் 20 தடவைகள் இந்த விதைகுண்டுவீச்சு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் கூலன் , வேம்பு , ஆத்தி , நாகை , புளி , பருத்தி , பாலை , வீரை , மருது , கித்துள் உட்பட 100,000 விதைகள் வான் வழிமூலம் வீசப்பட்டன.

இலங்கை வன பாதுகாப்பு திணைக்களம் , பேராதெனிய பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள கட்டளை வேளாண்மை பிரிவினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...