follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுபாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள்!

பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள்!

Published on

கொரோனா தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வட மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர் என வடமாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

2020ம் ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் வட மாகாணத்தில் 485 மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளனர் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார் தெரிவித்துள்ளார்

மேலும் 2021 ஆம் ஆண்டில் பாடசாலையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 105 ஆகக் குறைந்துள்ளதாகவும், ஆனால் 2022 ஆம் ஆண்டில் இதுவரை வடக்கில் 519 பாடசாலை மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறி சென்றுள்ளதாகவும் வடமாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் வேலைகளை இழந்துள்ளதால் பாடசாலை மாணவர்கள் மாகாணத்தை விட்டு வெளியேறி கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு வேலை தேடிச் செல்வதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சபாநாயகரை சந்தித்த உகண்டா தேசிய கிரிக்கெட் அணி

உகண்டா தேசிய கிரிக்கட் அணி மற்றும் அதன் அதிகாரிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தனர். இலங்கை கிரிக்கட்டின்...

1,083 செல்போன்கள் – 02 வர்த்தகர்கள் கைது

சட்டவிரோதமாகக் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு ​கொண்ட பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள்...

போலி வைத்தியர்கள் குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...