follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுமலேசிய அரசாங்கத்தால் மருத்துவப் பொருட்கள் நன்கொடை

மலேசிய அரசாங்கத்தால் மருத்துவப் பொருட்கள் நன்கொடை

Published on

இலங்கைக்கான மருத்துவப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுமாறு இலங்கையின் சுகாதார அமைச்சு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மலேசிய அரசாங்கத்தின் ஆதரவைக் கோரியிருந்தது. அந்த வகையில், இலங்கைக்கு அவசரமாகத் தேவையான மருத்துவப் பொருட்கள் உள்ளடங்கிய நன்கொடையை மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

நேற்று மலேசிய சுகாதார அமைச்சில் நடைபெற்ற கையளிப்பு வைபவத்தில், மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன், நன்கொடையை (63,100 அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவப் பொதி) மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரான விமானப்படைத் தளபதி (ஓய்வு பெற்ற) சுமங்கலா டயஸ் அவர்களிடம் கையளித்தார்.

இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நன்கொடைக்கான விமானப் போக்குவரத்தை நல்கியதுடன், 2022 அக்டோபர் 29ஆந் திகதி கோலாலம்பூரில் இருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானம் ருடு 319 மூலம் அந்தப் பொதி அனுப்பி வைக்கப்பட்டது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...