follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடு50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல்

50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல்

Published on

கார்ட்போர்ட் பெட்டிக்குள் மிக சூட்சுமமாக மறைத்து கொண்டுவரப்பட்ட 50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் , இலங்கை சுங்கப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தபால் மதிப்பீட்டுப் பிரிவிற்கு கிடைத்த தபால் பொதியொன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தனியார் பாவனைக்கான பொருட்கள் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டு இந்த பொதி ஜெர்மனியிலிருந்து அங்கொடை பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த பொதியினுள் கார்ட்போரட் பெட்டியொன்றினுள் மிகவும் நுட்பமான முறையில் பொதியிடப்பட்ட 2,387 கிராம் நிறையுடைய 4,956 மெத்தபெட்டமின் எனப்படும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் சுமார் 49.56 மில்லியன் ரூபா பெறுமதி என சுங்க ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னரான அடுத்தகட்ட விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட போதை வில்லைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...