follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுதனுஷ்க தொடர்பில் சிட்னி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தனுஷ்க தொடர்பில் சிட்னி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Published on

யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றத்தினால் பிணை மறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர் தொடர்ந்தும் பொலிஸாரின் காவலிவ் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்திற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, யுவதியொருவர் மீது பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

சிட்னியின் கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி ஒருவரால் செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை முறைப்பாடு தொடர்பில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் அவுஸ்திரேலிய குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு பொலிஸ் பிராந்திய கட்டளையின் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவை சிட்னி நகர பொலிஸார் பரமட்டா பொலிஸ் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை மறுக்கப்பட்டிருந்தது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...