follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமாணவர்களை பொலிஸார் மின்சார சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் - விசாரணைகள் ஆரம்பம்

மாணவர்களை பொலிஸார் மின்சார சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்

Published on

ஆசிரியர் ஒருவரின் பேர்ஸ் காணாமல்போனதை தொடர்ந்து மாணவர்களை விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார் அவர்களை மின்சார சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஹங்கமுவவில் இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் கல்வியமைச்சும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபட்டால் என்ன செய்யவேண்டும் என்ற வழிகாட்டுதல் விடுக்கப்பட்டுள்ளது,பாடசாலை அதிகாரிகள் இதனை மீறினார்களா என்பது தெரியாது விசாரணை அறிக்கைகள் முடிவிற்கு வந்த பின்னரே முடிவிற்கு வரமுடியும் விசாரணைகள் முடிவடைந்ததும் நாடாளுமன்றத்திற்கு அறிவிப்பேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்து ஜெயவர்த்தன பாடசாலை மாணவர்களை பொலிஸார் துன்புறுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...