follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபாடசாலை மாணவர்கள் பலர் போதைக்கு அடிமை!

பாடசாலை மாணவர்கள் பலர் போதைக்கு அடிமை!

Published on

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டுள்ளது,ஆனால் முன்னரை விட தற்போது போதைப்பொருள் பாவனை, விற்பனை அதிகாரித்துள்ளது,பாதுகாப்பு பிரிவினரால் தொன் கணக்கில் போதைப்பொருள் கைப்பற்றப்படுகிறது ஆனால் அவை மீண்டும் வெளியே செல்கின்றன இது பற்றி நாம் ஆராய்ந்து வருகின்றோம் ஆகவே வழக்கு நடவடிக்கைக்கு தேவையான போதைப்பொருளை மட்டும் வைத்துக்கொண்டு மிகுதியை இல்லாமல் செய்வது சிறந்தது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இன்றைய நவீன காலத்தில் ,ஈஸி காஸ் முறையில் போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுகிறது.ஈஸி காஸ் மூலம் பணம் செலுத்தப்படுகிறது.பின்னர் இந்த வீதியில் போதைப் பொருள் வைக்கப்பட்டுள்ளது,அதனை எடுத்துக்கொள்ளுங்கள் என்று செய்திகள் பரிமாற்றப்பட்டு ,வியாபாரம் துல்லியமாக நடைபெறுகிறது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர்.இது தவிர பிரபல பாடசாலை மாணவர்கள் பலர் போதைக்கு அடிமையாகியுள்ளனர்.இது பற்றி பாடசாலை ஆசியர்கள்,அதிபர்கள் எமக்கு மறைக்கின்றனர்,பாடசாலையின் பெயருக்கு அவதூறு வந்துவிடும் என்பதற்காக தகவல்கள் மறைக்கப்படுகின்றன.ஆனால் நாம் எமது பணிகளை தொடர்ந்து செய்கின்றோம் ன நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...