follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுதிலினி பிரியமாலியின் தொலைப்பேசி உரையாடல் – ஞானசார தேரரிடம் விசாரணை

திலினி பிரியமாலியின் தொலைப்பேசி உரையாடல் – ஞானசார தேரரிடம் விசாரணை

Published on

திலினி பிரியமாலி செய்ததாகக் கூறப்படும் பெரும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, ஞானசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவரிடம் சுமார் மூன்று மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பாரிய மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் திரைப்படக் கலைஞர்கள் போன்ற பல முக்கியப் பிரமுகர்களிடம் வாக்குமூலம பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி சந்தேகநபர் 2,510 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரியமாலியுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திலினி பிரியமாலிக்கு எதிராக இதுவரை 14 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.

திலினி பிரியமாலி, இசுரு பண்டார, ஜானகி சிறிவர்தன மற்றும் பொரளை சிறிரிசுமண தேரர் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரியா மீதான அனைத்து தடைகளையும் விரைவில் நீக்குவோம் – ட்ரம்ப்

சிரியா மீதான அனைத்து தடைகளையும் நீக்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணமாக சவுதி அரேபியா வந்தபோது...

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட பரிசோதனைக்கு

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து...

அம்பாறை – மகியங்கனை வீதியில் சொகுசு பேரூந்து ஒன்று விபத்து

அம்பாறை - மகியங்கனை வீதியில், மகியங்கனையின் வேவத்த பகுதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக...