follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை கட்சி தலைவர்கள், சிவில் அமைப்புகளிடம் கையளிக்க நடவடிக்கை – விஜயதாஸ ராஜபக்ஸ

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை கட்சி தலைவர்கள், சிவில் அமைப்புகளிடம் கையளிக்க நடவடிக்கை – விஜயதாஸ ராஜபக்ஸ

Published on

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பாக அனைத்து தரப்பினரதும் கருத்துகள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.

அனைத்து தரப்பினரது கருத்துக​ளையும் பெற்றுக்கொண்டதன் பின்னர் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைவாக சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிட்ரோ மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் சுமார் 250 மேன்பவர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது சம்பளத்தை உயர்த்தவில்லை என்றும், அரசாங்கம்...

கொத்மலை பஸ் விபத்து – உயிரிழந்தவர்களுக்கான நிதி பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைப்பு

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி...

புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக கெரி ஆனந்தசங்கரி

கனடாவின் புதிய பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இலங்கைத் தமிழரான கெரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார். பொதுப் பாதுகாப்பு அமைச்சராக, கெரி ஆனந்தசங்கரி,...