follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஅரசியலமைப்புப் பேரவைக்கான உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

அரசியலமைப்புப் பேரவைக்கான உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Published on

இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய அரசியலமைப்பின் 41அ உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம்
தாபிக்கப்படவுள்ள அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக பரிசீலிப்பதற்காக பகிரங்க வாழ்வில் அல்லது உயர் தொழிலில் தமக்கென்று சிறந்த நிலையை ஏற்படுத்திக் கொண்ட கீர்த்தி வாய்ந்தவர்களும் நேர்மையுடையவர்களும் அத்துடன் ஏதேனும் அரசியற் கட்சியின் உறுப்பினரல்லாதவர்களுமான ஆட்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இதற்கான விண்ணப்பங்கள் www.parliament.lk என்னும் பாராளுமன்ற இணையத் தளத்தில் காணப்படும் மாதிரிப்படிவத்துக்கு இணங்க தயாரிக்கப்பட்ட சுயவிபரப் படிவத்துடன், 2022 நவம்பர் 28ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் பாராளுமன்ற செயலாளர் நாயகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் நியமனம்’ எனக் குறிப்பிட்டு விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...