follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுசந்தையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு!

சந்தையில் மீண்டும் முட்டைக்கு தட்டுப்பாடு!

Published on

சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன காரணமாக தாம் இன்னல்களை சந்தித்து வருவதாக  உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முட்டைக்கான தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தேவைக்கேற்ப கேக் உள்ளிட்ட தீண்பண்டங்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன தெரிவித்தார்.

மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன?

இந்த விடயம் தொடர்பாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகரவிடம் வினவிய போது, 50 ரூபாவிற்கு அதிகமாக முட்டை விற்பனை செய்பவர்களை கைது செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்ததை அடுத்து, வியாபாரிகள் முட்டை விற்பனையை நிறுத்தியுள்ளதாக கூறினார்.

இந்த நிலைமையின் கீழ் திறந்த சந்தைகளில் தற்போது முட்டடைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...