follow the truth

follow the truth

August, 2, 2025
Homeஉள்நாடுவதிவிடமல்லாத சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

வதிவிடமல்லாத சிங்கப்பூர் உயர்ஸ்தானிகர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

Published on

2022 நவம்பர் 13 முதல் 18 வரையான இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, சிங்கப்பூரின் வதிவிடமல்லாத உயர்ஸ்தானிகர்  சந்திர தாஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை அண்மையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி மற்றும் உயர்ஸ்தானிகர் தாஸ் இருவரும் கலந்துரையாடினர். சிங்கப்பூரின் வணிகப் பிரதிநிதிகள் குழுவொன்றும் உயர்ஸ்தானிகருடன் இதன்போது இணைந்திருந்தனர். சிங்கப்பூரில் இருந்து சாத்தியமான முதலீடு மற்றும் வணிகத்திற்கான வாய்ப்புக்கள் மற்றும் பகுதிகள் குறித்து அமைச்சர் இதன்போது விளக்கினார்.

இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரியவை சந்தித்த உயர்ஸ்தானிகர் தாஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான நிதி, முதலீடு மற்றும் சுற்றுலா தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி, வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர், முதலீட்டு சபையின் தலைவர் மற்றும் இலங்கை வர்த்தக சபையினரையும் உயர்ஸ்தானிகர் தாஸ் இலங்கைக்கான தனது விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...