follow the truth

follow the truth

August, 27, 2025
Homeஉள்நாடுரயில் தடம்புரள்வுகள் அதிகரிப்பு - இவ்வருடம் 42 சம்பவங்கள்

ரயில் தடம்புரள்வுகள் அதிகரிப்பு – இவ்வருடம் 42 சம்பவங்கள்

Published on

கடந்த வருடத்தினை காட்டிலும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ரயில் தடம்புரள்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் இன்று ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது.

பொல்கஹாவலையில் இருந்து இரத்மலானைக்கு சென்ற ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் கொள்ளுப்பிட்டி மற்றும் கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் போக்குவரத்து ஒருவழி போக்குவரத்திற்காக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

இதன்படி, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், ரயில் தடம்புரள்வு சம்பவங்கள் 42 ஆக அதிகரித்துள்ளன.

கடந்த வருடத்தில் 34 சம்பவங்களும், 2020 ஆம் ஆண்டில் 29 சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

ரயில் தடம்புரண்டால் அதனால் ஏற்படும் சேதத்திற்கான இழப்புக்களை ரயில்வே இயக்குநர்களிடமிருந்து வசூலிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வேகக்கட்டுப்பாட்டிற்கு ஏற்ப ரயில்களை இயக்குவதற்கு இயக்குநர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, சில ரயில் சேவைகள் தாமதமடையக்கூடும் என ரயில் இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...