follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடு14 இந்திய மீனவர்கள் விடுதலை

14 இந்திய மீனவர்கள் விடுதலை

Published on

இலங்கை கடற்படையினரால் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 06ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரும் மன்னார் நீதவான் நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில் இன்று(17) ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை மற்றும் தடை செய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறையில் மீன்பிடித்தமை ஆகிய 02 குற்றச்சாட்டுகள் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினரால் சுமத்தப்பட்டிருந்தது.

02 குற்றச்சாட்டுகளுக்கும் தலா 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடம் வீதம் 02 வருட சிறைத்தண்டனை விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மீனவர்களை மிரிஹானை முகாமிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேற்கொள்ளவுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்கியுள்ள 14 வயதான சிறுவன், இன்று மன்றுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இவரை உறவினர்கள் ஊடாக மிரிஹானை முகாமுக்கு அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட இந்திய படகின் உரிமையாளரும் மன்றில் ஆஜரானதுடன் தமது படகை விடுவிக்குமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்தார்.

படகின் உரிமையாளரை மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்குமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், அடுத்த வருடம் ஜூலை மாதம் 13ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு மற்றைய படகின் உரிமையாளருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...