follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் ரயில்கள் பயணிக்கும் 850 பாலங்கள் பழுந்தடைந்துள்ளன!

இலங்கையில் ரயில்கள் பயணிக்கும் 850 பாலங்கள் பழுந்தடைந்துள்ளன!

Published on

இலங்கையில் ரயில்கள் பயணிக்கும் 1,375 ரயில் பாலங்களில் 850 பாலங்கள் தற்போது பழுதடைந்துள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட ஏராளமான பாலங்கள் தற்போது  பழுதடைந்துள்ளன. இந்தப் பாலங்களில் தெமோதர ஒன்பது வளைவு பாலம் உட்பட பல பழைமையான ரயில் பாலங்களும் உள்ளடங்குவதாகவும் வேக வரம்புகளுக்கு உட்பட்டு இந்த பாலங்களின் ரயில்கள் இயக்கப்படும் என்றும் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரயில்வே துறையில் பணியாளர்  வெற்றிடங்கள் மற்றும் அந்நியச் செலாவணி நெருக்கடி ஆகியனவே  ரயில்வே கட்டமைப்பின் சரிவுக்கு காரணமாக உள்ளன.

ரயில் தண்டவாளங்கள் பற்றாக்குறையால், சீனாவிலிருந்து 10,000 ரயில் தண்டவாள கட்டைகளை பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...