follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து அறிக்கைகளையும் மென் பிரதிகளாக சமர்ப்பிக்க நடவடிக்கை!

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து அறிக்கைகளையும் மென் பிரதிகளாக சமர்ப்பிக்க நடவடிக்கை!

Published on

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற வருடாந்த அறிக்கைகளும் செயலாற்றுகை அறிக்கைகளும் அவற்றுக்கான மென் பிரதிகள் மூலம் தற்போது பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படுவதோடு அந்த அறிக்கைகளின் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான வன் பிரதிகளை மட்டும் தேவையைக்
கருத்திற் கொண்டு உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காகவும் சபா மண்டபத்தில் மற்றும் நூலகத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

தாள்களுக்கான அதிக செலவு காரணமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற அனைத்து அறிக்கைகளையும் மென் பிரதிகளாக (Soft Copy) சமர்ப்பிப்பதற்கு கடந்த 2022.06.02 அன்று இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம், 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின் மீதான குழுநிலை விவாதம் நடாத்தப்படுகின்ற காலப்பகுதியில் அந்தந்த அமைச்சுக்கள்/ நிறுவனங்களினால் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் முன்னேற்ற அறிக்கைகளையும் மென் பிரதிகள் மூலம் உறுப்பினர்களுக்கு
வழங்குவதற்கு 2022.09.29 ஆம் திகதி நடாத்தப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். அவ்வறிக்கைகளின் சில வன் பிரதிகளை உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக சபா மண்டபத்தில் மற்றும் நூலகத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...