follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக சத்யானந்தா! 

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக சத்யானந்தா! 

Published on

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.எஸ்.சத்யானந்தா இன்று (21) அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
நிர்வாகப் பணிகளில் நீண்ட அனுபவம் கொண்ட திரு. டபிள்யூ.ர்ஸ். சத்தியானந்தா நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளராக வருவதற்கு முன்னர் கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றினார்.
காலி/ பத்தேகம கிறிஸ்துதேவா ஆண்கள் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் அதே கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ இளங்கலை பட்டம் பெற்ற திரு.சத்யானந்தா அவுஸ்திரேலியாவின் லரோப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்
1998 ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட திரு.சத்யானந்தா தவலம, பத்தேகம, ஹிக்கடுவ மற்றும் காலி கடவத் சதர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
மேலும், அவர் முன்னர் தொழிற்பயிற்சி அமைச்சின் உதவிச் செயலாளராகவும், முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராகவும், அரச  நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான அருந்திக பெர்னாண்டோ, தேனுக விதானகமகே, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...