follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுGI குழாய் வழக்கில் கெஹலிய உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிணை

GI குழாய் வழக்கில் கெஹலிய உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிணை

Published on

2015 ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 990,000 ரூபா பணத்தை செலவிட்டு, 600 GI குழாய்களை கொள்வனவு செய்து அவற்றை வேறு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் பிரதிவாதிகள் மூவரும் தலா 20,000 ரூபா பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பிரதிவாதிகளின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை வௌிநாட்டு பயணம் மேற்கொள்ள தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...