follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடு6 மணிநேர நீர் விநியோகத்தடை

6 மணிநேர நீர் விநியோகத்தடை

Published on

கட்டுகஸ்தோட்டை பாரிய கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 24ஆம் திகதி  மு.ப. 8 மணி முதல் பி.ப. 2 மணி வரையிலான 6 மணிநேர நீர் விநியோகத்தடை பின்வரும் பகுதிகளில் அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கஹவத்த, தெலும்புகஹவத்த, உருகொட, கஹல்ல, வலனகல மற்றும் ஹிராகடுவ ஆகிய நீர்த்தேக்கங்களை உள்ளடக்கிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும்.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி நிலவரப்படி, மெகாவோட் 1,700...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர்...

சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு வைத்தியசாலை...