follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு"மக்கள் எழுச்சியை நிறுத்த முடியாது"

“மக்கள் எழுச்சியை நிறுத்த முடியாது”

Published on

தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்ற ஜனாதிபதியின் உரையை தமக்கு நெருக்கமானவர்கள் கைதட்டி பாராட்டினாலும், 220 இலட்சம் மக்கள் தொகை கொண்ட ஒட்டுமொத்த பொதுமக்களும் சோகமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (24) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு விடயத்தின் தன்மை தெரிந்தால் போராட்டத்தை நிறுத்த முயற்சிக்க மாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்ற ஜனாதிபதியின் உரையை பெரிதாகக் கவனிக்கத் தேவையில்லை என்றார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் தேர்தலின்றி பதவிகளை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்டில் அமைதியான பொதுப் போராட்டங்களுக்கு இடமுண்டு. அதற்கு பலம் கொடுக்கிறோம். அதற்கு தலைமையை வழங்குகிறோம். அவர்களை நிறுத்த அனுமதிக்க மாட்டோம். பொருளாதாரத்தின் திவால் நிலைக்கு எதிராக நாட்டு மக்கள் எழுச்சி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. இங்கு வெட்டிப் பேச்சு பேச வேண்டாம்.

நான் மஹிந்த ராஜபக்ஷவின் சீடர் என்று கூறியிருந்தார்கள். நான் மஹிந்த ராஜபக்ஷவின் சீடனாக இருந்திருந்தால் இன்று நான் ஜனாதிபதியாக இருந்திருப்பேன். எனவே நான் எதிர்க்கட்சித் தலைவர் இல்லை. சக்விதிக்கு அரசாட்சி தருவோம் என்று சொன்னாலும் நமது கொள்கைகள் ஏலம் விடப்படாது.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...