follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுமுன்னைய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் - ஜே.சி.அலவத்துவல

முன்னைய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் – ஜே.சி.அலவத்துவல

Published on

முன்னைய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல கேட்டுக்கொண்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், அதனை குறைக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விருப்பு வாக்கு முறையின் கீழ் நடத்த முடியும் என்றும் முன்னைய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்த தாம் ஆதரவு என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கு கணிசமான கால அவகாசம் தேவைப்படும் என்றும் எல்லை நிர்ணயத்தை முன்னெடுக்காமல் தேர்தலை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...