follow the truth

follow the truth

June, 16, 2025
Homeஉள்நாடுவௌிநாட்டு தபால் துறையில் வருமானம் அதிகரிப்பு

வௌிநாட்டு தபால் துறையில் வருமானம் அதிகரிப்பு

Published on

இலங்கையில் இருந்து தபால் திணைக்களத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொருட்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வெளிநாட்டு தபால் கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதனுடன் ஒப்பிடும் போது தனியார் தூதஞ்சல் (Courier) நிறுவனங்களின் தபால் கட்டணமும் அதிக விலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக தபால் திணைக்களத்தின் ஊடாக அனுப்பப்படும் பொருட்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கேற்ப வருமானம் அதிகரித்துள்ளதாகவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் தபால் பொருட்கள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தம்புள்ளையில் ஐ.ம.ச உறுப்பினர்கள் 6 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்

தம்புள்ளை பிரதேச சபையின் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து...

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP இற்கு

கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான துணைப் பட்டியல் பெயர்கள் இன்னும் பெறப்படவில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான துணைப் பட்டியலில் இருந்து பரிந்துரைக்கப்பட வேண்டிய 223 உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் பெறப்படவில்லை என்று...