follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடு24 தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்

24 தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்

Published on

சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் நேற்றைய தினம் இரவு சட்டவிரோதமாக நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களின் ஐந்து படகுகளை மடக்கி பிடித்த கடற்படையினர் படகில் இருந்த 24 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறையினரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் நீரியல் வளத்துறையினரால், ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் இன்றைய தினம் 24 மீனவர்களும் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில்நீதவான் உத்தரவிட்டார்.

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...