follow the truth

follow the truth

August, 23, 2025
Homeஉள்நாடுவைத்தியசாலை ஊழியர் போதைப்பொருட்களுடன் கைது

வைத்தியசாலை ஊழியர் போதைப்பொருட்களுடன் கைது

Published on

மஹரகம அபேக்க்ஷா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் வைத்தியசாலைக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொடை மிரிஹான பிரிவு ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுகாதார உதவியாளராவார். அவரிடமிருந்து 5 கிராம், 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் சுமார் ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 10 கிராம் கேரள கஞ்சாவும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த வைத்தியசாலை ஊழியர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை பொதி செய்து விற்பனை செய்வதாக நுகேகொடை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜனசாந்த கஹடதெனியவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் கடமைக்குச் சென்று கொண்டிருந்தபோது அவரை சோதனை செய்ததில் சிறிய பொட்டலங்களில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருள் பொதிகள் காணப்பட்டதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...