follow the truth

follow the truth

July, 5, 2025
Homeஉள்நாடுஇன்றுடன் முடிவுக்கு வரும் லிட்ரோ தட்டுப்பாடு

இன்றுடன் முடிவுக்கு வரும் லிட்ரோ தட்டுப்பாடு

Published on

நாடளாவிய ரீதியாக தட்டுப்பாட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை சரி செய்யும் வகையில் இன்று (01) முதல் 100,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்டர் செய்யப்பட்ட எரிவாயு கப்பல்கள் நாட்டிற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், சந்தைக்கு எரிவாயுவை வெளியிடுவது மட்டுப்படுத்தப்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார்.

கோரப்பட்ட எரிவாயுக் கப்பல்கள் தற்போது நாட்டை வந்தடைவதால், பண்டிகைக் காலத்தில் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் நுகர்வோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...

அஸ்வெசும – ஜூலை 16 வரை மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை எதிர்வரும் 16 திகதிவரை முன்வைக்க முடியுமென கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக...

கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்

நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும்...