‘என்னைப் போன்ற நல்லவர்கள் அருகில் இருப்பதால் தான் ஜனாதிபதி நல்லவராகியுள்ளார்’

591

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இன்று முன்னேறியிருப்பது தன்னை போன்ற நல்ல மனிதர்களால் சூழப்பட்டிருப்பதால் தான் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தம்மைப் போன்ற விவசாயக் குடியேற்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் முன்மொழிவுகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி நெல் விவசாயம் உள்ளிட்ட விவசாயத்திற்கு ஆதரவை வழங்கி வருவதாக அவர் கூறுகிறார்.

தன்னை போன்றவர்கள் அருகில் இல்லை என்றால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நெற்செய்கையை புறக்கணித்து நாட்டிலிருந்து முன்பு போல் அரிசியை கொண்டு வந்திருப்பார் என்றும் அவர் கூறினார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here