follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுநாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்க தீர்மானம்

நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்க தீர்மானம்

Published on

இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு நடைபெறும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தைச் சுற்றி தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் உள்ளிட்ட அரசியல் அமைப்புக்கள் உள்ளகத் தயார்படுத்துவது குறித்து பாதுகாப்புத் தலைவர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

செலவுத் திட்ட இறுதி விவாதத்திற்கு வரும் மக்கள் பிரதிநிதிகளை வழி மறிப்பது, அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட பல திட்டங்களில் உளவுத்துறையினர் ஈடுபட்டு வருவதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.

இதன்படி, நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களை கைது செய்யுமாறு சபாநாயகரின் தலையீட்டின் ஊடாக நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ளுமாறு மேல் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் கைது செய்யப்படும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பிணை வழங்கப்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பாதுகாப்புத் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

எதிர்வரும் 8ஆம் திகதி வான்கார்ட் சோசலிசக் கட்சி நாடு தழுவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு தயாராகி வருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்துள்ளன. பொருட்களின் விலை குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில், நாடாளுமன்றத்தை சுற்றிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படவுள்ள நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் முன்னணி நேற்றும் (5ம் திகதி) இன்றும் (6ம் திகதி ) நாடு தழுவிய தொடர் போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

பொருட்களின் விலையைக் குறைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் எதிர்வரும் 9ஆம் திகதி கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இதேவேளை நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு முன்பாக போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...