follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுசிறுநீரக கடத்தல் : 'பாய்' கைது

சிறுநீரக கடத்தல் : ‘பாய்’ கைது

Published on

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பொரளை, கோட்டா வீதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரகக் கடத்தலின் பிரதான முகவராக இருந்த நபர் நேற்று (5ஆம் திகதி) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டக்குளி, கஜிமாவத்தை பகுதியைச் சேர்ந்த பாய் என்ற மொஹமட் பசீர் மொஹமட் ரஜப்தீன் என்ற 41 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுச் சென்றதாகவும், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் 2 ஆம் பிரிவு நிலையத் தளபதி பிரதிப் பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம். ரத்னமலலாவுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு 14, 15 பிரதேசங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் பெண் ஒருவரும் ஒன்றரை இலட்சம் ரூபா 80 இலட்சம் என வெவ்வேறு விலைகளை தருவதாகக் கூறி இந்த மோசடியை நடத்தி வருகின்றனர்.

பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்த நால்வரும் மற்றும் பெண்ணும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர் அஜித் தென்னகோனிடம் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, வைத்தியப் பரிசோதனையில் இவர்களின் சிறுநீரகம் ஒன்று அகற்றப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுநீரகத்தை வழங்கியவர்கள் தமக்கு வாக்குறுதியளித்த பணத்தை வழங்கவில்லை என பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதையடுத்து, நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...