follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுநத்தல் அலங்காரப் பொருட்களின் விலை மும்மடங்காக உயர்வு

நத்தல் அலங்காரப் பொருட்களின் விலை மும்மடங்காக உயர்வு

Published on

கிறிஸ்மஸ் அலங்காரப் பொருட்களின் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக புறக்கோட்டையில் உள்ள மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அலங்கார பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

இரண்டு அடி உயர செயற்கை கிறிஸ்துமஸ் மரம் ரூ.200ல் இருந்து ரூ.2000 ஆகவும், 4 அடி கிறிஸ்துமஸ் மரம் ரூ.800ல் இருந்து ரூ.5500 ஆகவும், 7 அடி கிறிஸ்துமஸ் மரத்தின் விலை ரூ.6000ல் இருந்து ரூ.23000 ஆகவும் உயர்ந்துள்ளது.

250 முதல் 600 ரூபாய்க்கு மேல் மின்விளக்குகள், ஸ்டீமர்கள் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

மத்திய மலைநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் இயற்கை கிறிஸ்மஸ் மரத்தின் விலை இரண்டாயிரத்தை தாண்டும் என வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். தற்போதைய எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு இம்முறை குறைந்த விலையில் அவற்றை வழங்குவது சாத்தியமற்றது எனவும் அவர்கள் மேலும் வலியுறுத்துகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...