follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP3பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை நீக்க முன்மொழிவு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை நீக்க முன்மொழிவு

Published on

மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்குப் பதிலாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளுக்கென தனியான நிறுவனங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் இவ்வாறான முறை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் கூற்றுப்படி, இந்த வருடம் டிசெம்பர் மாதத்திற்குள் CEV 152 பில்லியன் ரூபா நட்டத்தை சந்திக்கும் என்று கருதப்படுகிறது.

தொடர்ந்தும் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில்;

இந்த ஆண்டு மற்றும் இந்த விலை திருத்தத்தில் அக்டோபர் 31ம் திகதி வரை மின்சார வாரியத்திற்கு 112 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் மட்டும். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 152 பில்லியன் இழப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.

100 சதவீத நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடிந்தால், ஒரு யூனிட்டை 3 ரூபாய்க்கு வழங்க முடியும். எங்களிடம் திறன் குறைவாக உள்ளது.

மின்சார சபையின் சீர்திருத்தத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் பிரகாரம் காற்றாலை மற்றும் நீர்மின்சாரத்தினால் இயங்கும் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் அரசாங்கத்தின் கீழ் வைத்திருக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சார சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், புத்தளத்தில் உள்ள மஹாவலி, சமனல குளம் மற்றும் லக்ஷபான, காற்றாலை மற்றும் எஞ்சிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் அரசாங்கத்தின் கீழ் பராமரிக்கப்படும். மாறாக தனியாருக்கு வழங்கப்பட மாட்டாது என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம்

பூஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள 5 கைதிகள் கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தி வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  பொலிஸ் விசேட...

கொலன்னாவ நகர சபையின் அதிகாரம் NPP வசம்

கொலன்னாவ நகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. இன்று (18) காலை கூடிய கொலன்னாவ நகர சபைக்கான...

பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதியதில் 18 பேருக்கு காயம்

இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பேருந்தும் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி...