follow the truth

follow the truth

July, 17, 2025
Homeஉள்நாடுதேர்தலை நடத்த உத்தரவிடுமாறு கோரி மனுத்தாக்கல்

தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு கோரி மனுத்தாக்கல்

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இரண்டு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியவர்களினால் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மற்றைய மனு தயாசிறி ஜயசேகர, லக்ஸ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியவர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தற்போதைய உள்ளுராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் அடுத்த வருடம் மார்ச் 19ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட விதிகளின்படி தேர்தல் தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே இச்செயற்பாடு ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மக்களின் சர்வஜன வாக்குரிமை மீறப்படுவதாக மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

எனவே, எதிர்மனுதாரருக்கு அழைப்பாணை அனுப்பவும், உள்ளுராட்சி தேர்தலை நடத்த விருப்பம் தெரிவித்து அரசாணை பிறப்பிக்கவும், தேர்தலை நடத்த உத்தரவிடவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கெஹெலியவும் குடும்பத்தினரும் சிக்கினார்கள் – குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது, 97...

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று துறைசார் மேற்பார்வைக் குழுவில்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு இன்று...

கண்டி எசல பெரஹெர உற்சவம் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெரா உற்சவம் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி ஆரம்பமாக...