follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுடயனா கமகேவிற்கு எதிரான பயணத்தடை 5 நாட்களுக்கு நீக்கம்

டயனா கமகேவிற்கு எதிரான பயணத்தடை 5 நாட்களுக்கு நீக்கம்

Published on

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிரான வௌிநாட்டுப் பயணத்தடையை தற்காலிமாக நீக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதற்கமைய, குறித்த வௌிநாட்டுப் பயணத்தடை 05 நாட்களுக்கு நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 18 ஆம் திகதி, சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவான் நீடித்தார்.

இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் ஐந்து நாட்களுக்கு தடையை தளர்த்தியுள்ளது.

அத்துடன், விரிவான விசாரணை அறிக்கையை 2023 ஜனவரி 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...