follow the truth

follow the truth

July, 13, 2025
Homeஉள்நாடுசப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பம்

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீள ஆரம்பம்

Published on

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் சுத்திகரிப்பிற்கு தேவையான மசகு எண்ணெய் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கிடைத்துள்ளதாகவும் இன்று முதல் தொடர்ச்சியாக எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உற்பத்தி நடவடிக்கைகளுக்கு போதுமான மசகு எண்ணெய் கிடைக்காமையால் கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

அதற்கமைய, சுமார் 70 நாட்களாக சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.

இன்று எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், நாளாந்தம் ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் டீசல், 550 மெட்ரிக் தொன் பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் விமானத்திற்கு தேவையான 950 மெட்ரிக் தொன் எரிபொருள் ஆகியவற்றை விநியோகிக்க முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...