follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுதினேஷ் ஷாஃப்டரின் இறுதி சடங்குகள் இன்று

தினேஷ் ஷாஃப்டரின் இறுதி சடங்குகள் இன்று

Published on

படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் இறுதிச் சடங்குகள் இன்று (18) நடைபெற உள்ளது.

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரான தினேஷ் ஷாப்டர் டிச. 15ம் திகதி கொலை செய்யப்பட்டார்.

தற்போது, அவர் பொரளை பொது மயானத்திற்கு வந்த வழியிலேயே புலனாய்வாளர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, சம்பந்தப்பட்ட வீதிகளுக்கு அருகில் அமைந்துள்ள சி.சி.டி.வி. காணொளிகளை விசாரணைக்காக ஒன்று திரட்டியதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன், வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பல பகுதிகளில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸும் அந்த நபர்களில் ஒருவர்.

பொரளை பொது மயானத்தில் கைகால்கள் கட்டப்பட்டு பலத்த காயங்களுடன் காரில் சென்ற அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இணைப்புச் செய்தி 
தினேஷ் ஷாப்டர் கொலை : 15 பேரின் வாக்குமூலங்கள் பதிவு

தினேஷ் ஷாப்டர் கொலைக்கான காரணமும், பின்னணியும்

கடத்தப்பட்டு பொரளை மயானத்தில் விடப்பட்ட ஜனசக்தி நிறுவனத் தலைவர் உயிரிழப்பு

தினேஷ் ஷாப்டர் கொலை : ஊடகவியலாளர் சமுதிதவுக்கு சிஐடி அழைப்பு

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...