follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுஅரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெறவேண்டும்

அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெறவேண்டும்

Published on

அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற்று இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.

அரச பணியில் உள்ள மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அமுலாகும் சட்டம் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை நேற்று சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமரின் சுற்றறிக்கையின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களும் அறுபது வயதில் ஓய்வுபெற வேண்டும் என சிறிவிமல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அறுபது வயதிற்குப் பிறகு மக்கள் உடல், மன மற்றும் உடல்நலப் பிரச்சினைகளையும், மற்ற பலவீனங்களையும் அனுபவிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...