follow the truth

follow the truth

May, 17, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாசஜித் வரமுன்னர் ரணிலை புகழ்ந்த பொன்சேகா

சஜித் வரமுன்னர் ரணிலை புகழ்ந்த பொன்சேகா

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு புண்ணியமாகட்டும், நாட்டில் இருந்த எரிபொருள் வரிசை தற்போது இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

“… இந்நாட்களில் எம்மை சந்திக்கும், அல்லது நாம் சந்திக்கும் மக்கள் பொய்யான புன்னகையுடன் எம்மை ஆதரிக்க முயன்றாலும், முகங்களில் வெறுப்பு மற்றும் ஆதங்கள் இருக்கின்றமை தெளிவாகத் தெரிகின்றது.

எங்களுக்கு தெரியும் உங்களால் வாழ முடியாத ஒரு நாட்டில் வாழ்கிறீர்கள். மூன்று வேளை சாப்பாட்டிற்கோ இரண்டு வேளை சாப்பாட்டிற்கோ முடியாது, பிள்ளைகளுக்கு சாப்பாட்டினை வழங்க முடியாது, பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை வழங்க முடியாது, ரணிலுக்கு புண்ணியமாகட்டும் இருந்த பெட்ரோல் வரிசை மட்டும் இப்போதைக்கு இல்லை.. மற்றைய அனைத்தினதும் விலை வானமளவுக்கு உயர்ந்து நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உலகிற்கே நாம் கடன்காரராக மாறியுள்ளோம். இதனால் உலக நாடுகள் எமக்கு கடன் வழங்குவதில்லை.

நாட்டினை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் மீண்டும் தலைதூக்குகின்றனர். எனது அரசியல் வாழ்க்கைக்கு 13 1/2 வருடம் அதிலும் 2 வருடம் சிறைச்சாலையில் இருந்தேன்..”

LATEST NEWS

MORE ARTICLES

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில்...

புதிய அரசியல் கூட்டணியில் 15 SJP எம்பிக்கள்

அடுத்த தேர்தலுக்கு முன், புதிய கூட்டணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் வரவிருக்கும் பரந்த கூட்டணியின் பணிகளை நிறைவுக்கு...

சஜித் மற்றும் அநுரவின் விவாதத்திற்கு பொது விடுமுறை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தை...