follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகாற்றழுத்த தாழ்வு நிலை கரையை நோக்கி நகர்கிறது

காற்றழுத்த தாழ்வு நிலை கரையை நோக்கி நகர்கிறது

Published on

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு கரையை அடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல காலகட்டங்களில் மழை பெய்யும் அதேவேளை ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய மின்னல் விபத்துக்கள் மற்றும் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மத்திய மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் மறு அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாம் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...