follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுமலிவு விலையில் முட்டை வாங்கிய அமைச்சர்

மலிவு விலையில் முட்டை வாங்கிய அமைச்சர்

Published on

55 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் கொழும்பு மற்றும் கம்பஹாவில் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பத்தரமுல்லையில் மலிவான முட்டைப் பொதி ஒன்றை கொள்வனவு செய்தார்.

சந்தையில் முட்டையின் விலை 65 – 70 ரூபாவாக அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு, 55 ரூபா விலையில் நுகர்வோருக்கு முட்டை விற்பனையை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைய , கொழும்பு மற்றும் கம்பஹாவின் பல பகுதிகளில் முட்டை விற்பனை செய்யும் பணிகள் இன்று (28) ஆரம்பமாகின.

10 லொறிகளில் 10 இடங்களில் 04 இலட்சம் முட்டைகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இம்மாதம் 30ஆம் திகதி காலி மற்றும் கண்டி நகரப் பகுதிகளில் முட்டை விற்பனை செய்யப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...