follow the truth

follow the truth

August, 1, 2025
Homeஉள்நாடுமொட்டை அடிக்காத மாணவர்களுக்கு பாலி பல்கலைக்கழகத்தின் கதவுகள் மூடப்படும்

மொட்டை அடிக்காத மாணவர்களுக்கு பாலி பல்கலைக்கழகத்தின் கதவுகள் மூடப்படும்

Published on

ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் போது, ​​நியமனம் பெற்ற மாணவர்கள் அனைவரும் தலைமுடி மற்றும் தாடி ஆகியவற்றினை நீக்கி ஒழுக்கத்துடன் வரவேண்டும் என மேற்படி பல்கலைக்கழகத்தின் கல்விப் பேராசிரியர் (துணைவேந்தர்) பேராசிரியர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் ஒழுக்கத்தைப் பேணுவதற்கான விதிகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், பல்கலைக்கழகம் திறக்கும் வரை ஆன்லைன் விரிவுரைகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அமரபுர பிரிவின் உயர்மட்ட மகாநாயக்கர் தொடம்பஹல சந்திரசிறி தேரரை பல்கலைக்கழக ஆளும் அதிகாரசபையினர் நேரில் சென்று பார்த்தபோது, ​​இந்தப் பல்கலைக்கழகத்தை கடுமையான சட்ட முறைமையுடன் நிர்வகியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் நடத்தையை கண்டுகொள்ளாத பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பீடாதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...