follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉள்நாடுஅரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் பாடப்புத்தகம் அச்சிடுவதில் தாமதம்

அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் பாடப்புத்தகம் அச்சிடுவதில் தாமதம்

Published on

கல்வியாண்டு 2023 இற்கான, அரச அச்சக கூட்டுத்தாபனம் மேற்கொள்ளும் பாடநூல் அச்சிடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொத்த புத்தகத் தேவையில் நாற்பத்தைந்து சதவீதத்தை அரச அச்சக கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்தியக் கடன் உதவித் திட்டத்தின் கீழ் காகிதம் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கும் வகையில், கூட்டுத்தாபனம் புத்தகங்களை அச்சடிக்கும் பணியை மேற்கொண்டது.

தற்போது வரை இத்திட்டத்தின் கீழ் தேவையான பொருட்கள் கிடைக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கின்றது.

அடுத்த மாதத்திற்குள் பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற முக்கிய பாடங்கள் தொடர்பான புத்தகங்களை முன்கூட்டியே அச்சிடுமாறு கூட்டுத்தாபனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீடு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் அரச அச்சக கூட்டுத்தாபனம் எடுத்துள்ள அனைத்து புத்தகங்களையும் மார்ச் மாதத்திற்குள் அச்சிட முடியாது என பதிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மீதம் உள்ள ஐம்பத்தைந்து சதவீதத்தை கையகப்படுத்திய தனியார் துறை நிறுவனங்கள், அச்சிடும் பணியை துவங்கி, அடுத்த வாரம் முதல் புத்தகங்கள் துறையிடம் பெறப்பட உள்ளன. புத்தகம் அச்சிடுவதற்கு இந்த ஆண்டு செலவிடப்பட்ட தொகை ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...