follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுரயில்களுக்கு பதிலாக பேரூந்துகள் சேவையில்

ரயில்களுக்கு பதிலாக பேரூந்துகள் சேவையில்

Published on

பல்வேறு காரணங்களால் நாளாந்தம் கணிசமான எண்ணிக்கையிலான ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்படுவதுடன், மக்களின் வசதிக்காக நாளாந்தம் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உதிரி பாகங்கள் இல்லாமை மற்றும் உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக கடந்த காலங்களில் தொழிநுட்பக் கோளாறுகளுக்கு உள்ளான பெருமளவிலான பஸ்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். தற்போது அந்த பேருந்துகள் பழுது நீக்கப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதனால் மக்களின் தேவைக்காக போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படுவதைக் கருத்தில் கொண்டு, உரிய வழித்தடங்களில் அதிக பேருந்துகளை இயக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் பணத்தில் இந்தியாவிடமிருந்து உதிரி பாகங்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தொழில்நுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ள பேருந்துகளை எதிர்காலத்தில் விரைவாகச் சீர்செய்ய முடியும் எனவும் தலைவர் குறிப்பிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...