follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடு"தவறான அறிக்கைகளை வெளியிடாதீர்கள்" - பாட்டளி

“தவறான அறிக்கைகளை வெளியிடாதீர்கள்” – பாட்டளி

Published on

இலங்கை மின்சார சபை ஆகஸ்ட் மாதத்தில் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், ஒக்டோபர் மாதத்தில் இலங்கை மின்சார சபையின் நட்டம் 11 பில்லியன் ரூபாவாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை மின்சார சபையின் செயற்பாட்டு இலாபத்திற்கு காரணம் நீர் மின் உற்பத்தி அதிகரிப்பே தவிர கட்டண அதிகரிப்பு அல்ல என அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை மின்சார சபை முறையே 635.5 மற்றும் 655.0 கிகாவாட் மணிநேர நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாக பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஆகஸ்ட் மாதத்தில் நீர் மின் உற்பத்தி 633.9 ஜிகாவாட் மணிநேரமாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அந்த மாதத்தில் கட்டணம் முழுமையாக அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை மின்சார சபையின் நட்டம் 9 பில்லியன் ரூபா என சபை உறுப்பினர் தெரிவிக்கிறார்..

“அமைச்சரே, இதுபோன்ற பொய்யான மற்றும் தவறான அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன் உங்கள் கணக்கைச் சரி செய்யுங்கள்.” என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை பயன்படுத்தும் சேவை தாமதம்

அதிவேக நெடுஞ்சாலைகளில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்திக் கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ்...

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி

இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக்...