follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு“நாட்டு முட்டைகளை வெளிச் சந்தையில் விற்க முடியாது”

“நாட்டு முட்டைகளை வெளிச் சந்தையில் விற்க முடியாது”

Published on

தற்போதைய வர்த்தக அமைச்சரின் தலையீட்டினால் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் முட்டைகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய முடியாது என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அன்டன் நிஷாந்த அப்புஹாமி நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்திருந்தார்.

முட்டைகளை இறக்குமதி செய்யும்போது குளிர்சாதன பெட்டிகளில் முட்டைகளை கொண்டு வர வேண்டும் என்றும், உணவுப் போக்குவரத்தில் இதுவே உலக சட்டம் என்றும், 6 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படும் முட்டைகளை 72 மணி நேரத்திற்கு மேல் வைத்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

திறந்த சந்தையில் முட்டைகளை விற்க முடியாது, அதற்கு குளிர்சாதன பெட்டிகளும் இருக்க வேண்டும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

72 மணி நேரத்திற்கு மேல் விற்கப்படும் முட்டை 50% கெட்டுப்போன முட்டை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறான நிலைமைகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை இராணுவத்திற்கோ அல்லது கேக் உற்பத்தி செய்யும் பேக்கரிகளுக்கோ வழங்க முடியும் என வலியுறுத்திய தலைவர், தாம் அறிந்த வரையில் முதற்கட்டமாக கொண்டுவரப்படும் முட்டையின் அளவு இந்த நாட்டில் இரண்டு நாட்களுக்கு முட்டை உற்பத்தியாகும் எனவும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டை தற்போது இராணுவம் மற்றும் பேக்கரிகளுக்கு செல்வதால் சந்தையில் முட்டையின் விலையில் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் மொத்த விலையை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...