follow the truth

follow the truth

May, 15, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாமுஸ்லிம்களதும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க ஜனாதிபதி முயற்சி

முஸ்லிம்களதும் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளையும் தீர்க்க ஜனாதிபதி முயற்சி

Published on

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தலையீட்டில் வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

வடக்கு மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நேரடியான தலையீடுகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் உள்ள மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணத் தொடங்கியுள்ள நிலையில், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கியதன் பின்னர், இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை ஈடுபடுத்த ஜனாதிபதி மேலும் உத்தேசித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஏழாவது தடவையாகவும் பேச்சுவார்த்தை தோல்வி

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி இதுவரையில் உறுதியான பதிலை வழங்கவில்லை என...

கோட்டா களமிறக்கப்பட்ட அதே அநுராதபுர புனித பூமியில் மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் தொகுதிகள் மட்டத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள...

அரச வாகனங்கள் மூன்றையும் ஒப்படைத்த டயானா

சுற்றுலாத்துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மூன்றை கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை...