follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுபொலிஸ் அதிகாரிகள் 11 பேர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

பொலிஸ் அதிகாரிகள் 11 பேர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

Published on

மூன்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட 11 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியின் பிரகாரம் குறித்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.டி.அனுரங்க கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் இருந்து மலையகப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காலி பிரிவில் கடமையாற்றி வந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எச்.பி.எம்.ஏ.டபிள்யூ.டி.பி.ஹபுகொட புத்தளம் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எல்.யு.சமரசிங்க, கல்கிசை பிரிவில் இருந்து கொழும்பு போக்குவரத்து பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.என்.பி. மாகெதரகம காலி பிரிவில் இருந்து கேகாலை தலைமையக பொலிஸ் பரிசோதகராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது தவிர மேலும் 3 தலைமை காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையினால் உஷாராகும் வாகன இறக்குமதி

நான்கு வருடங்களுக்குப் பின்னர், இடைநிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டமையினால் வாகன இறக்குமதி துறையினர் நன்மையடைந்து வருகின்றனர். இதற்கமைய தற்போது...

ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு பயணம்

இம்முறை ஹஜ் யாத்திரை செல்லும் முதலாவது இலங்கை யாத்திரிகர்கள் குழு இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது. அவர்களை யாத்திரைக்கு...