follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுநாளை முதல் விஷேட ரயில் - பேரூந்து சேவைகள்

நாளை முதல் விஷேட ரயில் – பேரூந்து சேவைகள்

Published on

உயர்தரப் பரீட்சைக்கான விசேட போக்குவரத்துத் திட்டத்தை ரயில்வே மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இணைந்து நாளை முதல் ஆரம்பித்துள்ளன.

இதனால் உயர்தரப் பரீட்சைக்காக 1,617 மாணவர் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பொது முகாமையாளர் கலாநிதி நிமல் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, கால அட்டவணையின்படி, இலங்கை தேசய போக்குவரத்து மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என்றார்.

பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகள், பரீட்சை நிலைய பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என, தேவைப்பட்டால் பேருந்தில் பயணிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பொது முகாமையாளர் தெரிவித்தார்.

பேருந்துகளுக்கு மாணவர்கள் செலுத்தும் கட்டணம் கிலோமீட்டருக்கு 88 ரூபாயில் இருந்து 105 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு மாணவர் இருந்தாலும் பேருந்தை இயக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் 1959 என்ற ஹாட்லைன் எண்ணிற்கு அழைக்கவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய புகையிரத பயணங்களுக்கு மேலதிகமாக, பிரதான வீதியில் 12 புகையிரத பயணங்களும், கரையோர பாதையில் 4 பயணங்களும் உயர்தர பாடசாலைக் காலத்தில் அமுல்படுத்தப்படும் என ரயில்வே பிரதி அத்தியட்சகர் எம்.டி. இதிகொல்ல கூறினார்.

இந்த 16 ரயில் பயணங்களும் முன்பு இரத்து செய்யப்பட்ட ரயில் பயணங்கள் என்றும், திட்டமிட்டபடி ரயிலை இயக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஒரு ரயில் சிக்கலில் சிக்கினால் அதனை தொடர்ந்து செல்லும் கடுகதி ரயில் வேகம் குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்...

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்

தொழில்களில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தொழிற்செய்யும் இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல்...

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் பொறுப்பாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை...